தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களுக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அதனையும் மீறி நெகிழி பொருட்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய அமர்வு தடையை மீறி நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தவறிழைத்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு, நெகிழி தடை அரசாணையைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற கேள்விகளை எழுப்பியது.
இவை குறித்து 2 மாதங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
Loading More post
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
நடிகர் விவேக் மறைவு சொல்லிமாளாத வேதனை... துக்கத்தில் தழுதழுத்த திரைப் பிரபலங்கள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்