சென்னையில் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(65). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரத்திற்கு செல்லாத நிலையில் இரவு 8 மணியளவில் இரவு உணவை தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவர் திடீர் நெஞ்சுவலியால் துடித்து ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தாரும், அக்கம்பக்கத்தினரும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட முறை அந்த பகுதிவாசிகள் தொடர்பு கொண்டும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அதேபோல அம்பத்தூர் மண்டல சுகாதார துறை அதிகாரிகள் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
2 மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த அந்த பகுதிவாசிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரகாஷை சோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் ஆம்புலன்ஸை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல்துறையினர் அப்பகுதி மக்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.
கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தும் நிலையில் இது போன்ற அவசர சிகிச்சைக்காக அழைத்தால் ஆம்புலன்ஸ் வர மறுப்புதாக குற்றசாட்டு வைக்கும் பொதுமக்கள் அரசு கவனம் செலுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?