சேலம் ரயில் நிலையத்தில் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வாகன பிரிவு ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஆயுதப்படையில் வாகன பிரிவு தலைமை ஓட்டுனராக சுந்தர் (46) என்ற காவலர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக வெளி மாநில தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்திற்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுந்தர் மயங்கி விழுந்துள்ளார்.
ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு
உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள், காவலர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியது.
மேலும் காலையில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மீண்டும் மாலை பணிக்கு வந்தபோது இரவு மீண்டும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?