ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான் மசாலா விநியோகம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மதுபானங்களுக்காக பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன.
பால் கேனில் மதுபானம் கடத்தப்படுவது, டாஸ்மாக்கை உடைத்து கொள்ளை என சம்பவங்கள் அரங்கேறும் நிலையில் தற்போது பான்
மசாலாவுக்காக ட்ரோன்கள் பறக்கத் தொடங்கியுள்ளன. குஜராத்தின் மோர்பி பகுதியில் ட்ரோன் மூலம் பான் மசாலா வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான டிக் டாக் வீடியோவும் வைரலானது. வீடியோவை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்
கிருமிநாசினி சுரங்கங்களை அமைக்க வேண்டாம் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்