நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று பனை விதைகளை நடும் பனைத் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த நாராயணபுரம் ஏரியில் பனை விதைகள் நடப்பட்டன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விழாவில் பங்கேற்று, பனை விதையை நட்டு தொடங்கிவைத்தார். அவருடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதியினரான மஞ்சு ரேகா மற்றும் சந்தோஷ் ஆகியோரும், சீமானுடன் சேர்ந்து பனை விதைகளை விதைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பனை மரம் என்பது தமிழர்களின் தேசிய மரமாக இருக்கிறது. அது மண் அரிப்பை தடுத்து, நிலத்தடி நீரை வளப்படுத்துகிறது. பனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதை செய்கிறோம். ‘சந்திரயான் 2’ முயற்சியை தோல்வியாக பார்க்கக்கூடாது. முயற்சியே வெற்றி தான். அடுத்த முறை நமது விஞ்ஞானிகள் கட்டாயம் வெல்வார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?