மேற்குவங்கத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
டார்ஜிலிங் தொகுதிக்குட்பட்ட சிலிகுரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்வதாக இருந்தது. இதற்காக, அவர் ஹெலிகாப்டர் மூலம் சிலிகுரி செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலிகுரியில் உள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த மைதானத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அனுமதி அளிக்கப்படவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ராகுல் காந்தியின் பரப்புரையை திட்டமிட்டு தடுப்பதாக, காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காவல் துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், கடைசி நேரத்தில் தடைவிதிப்பதாக டார்ஜிலிங் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் சங்கர் மலகார் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை அனுமதி மறுப்பு காரணமாக ராகுல் காந்தியின் பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
PT Exclusive: "ரீமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி