நாடாளுமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 97 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு நாளையுடன் நிறைவடைகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இதுவரை 254 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வேட்புமனுக்கள் அளிப்பதற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாகல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கலும் நாளையுடன் நிறைவடைகிறது. 18 தொகுதிகளுக்கும் இதுவரை 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுநாள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இறுதிவேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!