சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. முதல் கட்ட வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
அதில் கமல்ஹாசன் பெயர் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகின்றார்.
அதேபோல், சிவகங்கை தொகுதியில் பாடலாசிரியர் சிநேகன் களமிறங்குகிறார். சிவகங்கையில் ஏற்கனவே பாஜக சார்பில் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றனர்.
நாமக்கல் - ஆர்.தங்கவேலு,
ஈரோடு - சரவணக்குமார்,
ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்,
கரூர் - ஹரிஹரன்
கடலூர் - அண்ணாமலை,
தென்காசி - முனீஸ்வரன்,
திருப்பூர் - சந்திரகுமார்,
பெரம்பலூர் - அருள்பிரகாசம்
காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்,
தி.மலை - அருள்,
ஆரணி - வி.ஷாஜி,
கள்ளக்குறிச்சி - கணேஷ்,
தென்சென்னை - ரங்கராஜன்,
மதுரை - அழகர்,
தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்