பெயிட்டி புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே சுமார் 270 கிமீ தொலைவில் பெயிட்டி புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. பெயிட்டி புயல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கலாமென்பதால் நாளை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெயிட்டி புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடலூரில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர். கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. அலையின் உயரம் 3 மீட்டரிலிருந்து 5 மீட்டர் வரை உள்ளது. கடலூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் 2-ஆவது நாளாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் 64 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து 4-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?