பிரபல கேரள நடிகையை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கையோடு சேர்த்து போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க கோரி நடிகர் திலீப் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நடிகையின் வீடியோ காட்சிகள் வெளியில் பரவுவதற்கும், நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று கூறி கொச்சி அங்கமாலி நீதிமன்றம் ஏற்கெனவே நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
கேரள பிரபல நடிகை (பாவனா) கடந்த 2017ம் ஆண்டு ஃபெப்ரவரி 17ம் தேதி, காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோவும் எடுத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ம் தேதி கைது செய்யப்பட்டு கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் கடந்த அக்டோபர் 3ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.
இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த நவம்பர் 11ம் தேதி கேரள போலீஸார் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 14வது குற்றவாளியாக இருந்த நடிகர் திலீப் குற்ற அறிக்கையில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குற்ற அறிக்கையோடு நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வழக்கின் முக்கிய ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸாரால் சமர்ப்பிக்கப்பட்டன.
போலீஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதை நிரூபிக்க தனக்கு அந்த வீடியோ காட்சிகளை தனக்கு வழங்குமாறும் நடிகர் திலீப் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த ஃபெப்ரவரி 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ”நடிகர் திலிப்பிற்கு வீடியோ காட்சிகளை வழங்கினால் அது வெளியில் பரவுவதற்கும், சம்பந்தப்பட்ட நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது,” எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.அரசு தரப்பு வாதத்தை ஏற்ற கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ காட்சிகளை வழங்க முடியாது எனவும், அதை வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
இதையடுத்து மீண்டும் நடிகர் திலீப், நடிகையின் பாலியல் வன்கொடுமை காட்சிகளை தனக்கு வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரிக்கிறது கேரள உயர் நீதிமன்றம்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!