சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பான இல்லம் மற்றும் அவசர உதவி எண் சேவை டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது.
சாதி மறுப்பு திருமண விவகாரங்களில் சமூக பஞ்சாயத்து அமைப்புகள் தலையிடுவதற்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் சாதி மறுப்பு தம்பதிகளுக்கு பாதுகாப்பான இல்லங்கள் வழங்குவது குறித்து ஆராயுமாறு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது.
இதையடுத்து சாதி, மதம் கடந்து திருமணம் செய்தவர்கள் சொந்த சமூகங்களால் புறக்கக்கணிப்படும் நிலை ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்போடு தங்க வைப்பதற்காக, கேரள அரசு பாதுகாப்பு இல்லங்களை கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில், தற்போது டெல்லி அரசும் சாதி, மதம் கடந்து திருமணம் செய்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு இல்லம் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது.
இதன்படி ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கான ‘181’ இலவச தொலைபேசி எண்ணை, சாதி மறுப்பு தம்பதிகளையும் உள்ளடக்கி இந்த சேவையை விரிவுபடுத்தி உள்ளது. இதன்படி அச்சுறுத்தல்கள் காரணமாக உதவி தேவைப்படும் தம்பதிகள் இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லம் ஒதுக்கப்படும். அச்சுறுத்தல் நீங்கும் வரை அல்லது தம்பதிகள் வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் வரை இந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். இந்த பாதுகாப்பு இல்லங்களில் 24 மணி நேரமும் போலீசார் நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி அரசு கொண்டு வந்த புதிய நிலையான இயக்க நடைமுறை கூறுகிறது.
தற்போது, கிங்ஸ்வே முகாமில் ஒரு பாதுகாப்பான வீடு அமைக்கப்பட்டுள்ளது, இது 60 சதுர அடி பரப்பளவில் இரண்டு அறைகள், ஒரு கழிப்பறை மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மூன்று ஜோடிகளுக்கு இடமளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்