இலங்கையில் தனியார் பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமுற்றனர்.
இலங்கையில் லுணுகலை என்ற இடத்திலிருந்து இன்று காலை பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. பதுளை மாவட்டம் பசறை என்ற இடத்தில் 13ஆம் கட்டை பகுதியில் அந்தப் பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 46 பேர் படுகாயமுற்றனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் நிதி உடனடியாக வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதமச் செயலாளர் ஆகியோருடன், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
விபத்து குறித்து விசாரணை அறிக்கை அளிக்க, ஊவா மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!