பிரான்ஸில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அங்கு இரண்டாவது முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரே நேரத்தில் மக்கள் பாரீஸ் நகரில் இருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதால், 700 கி. மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இங்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் நகர மக்களும், நாட்டின் பல நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருந்தவர்களும் சொந்த ஊருக்குச் செல்லும் நோக்கத்துடன் படையெடுத்ததால் சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரங்களுக்கு அணிவகுத்து நின்றன.
கொரோனா தொற்று அதிக அளவில் பிரான்ஸ் நாட்டில் ஏற்படும் நிலையில், பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக நான்கு வார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடி அறிவிப்பால் பதற்றமடைந்து மக்கள் மளிகைக் கடைகள் மற்றும் ஸ்டோர்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பெருமளவில் குவிந்துவிட்டனர்.
பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மெக்ரான், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தினமும் 50 ஆயிரம் அளவில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்த ஷான் கானரி காலமானார்
Loading More post
இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்
’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ - புகழேந்தி
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
``உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி