கீழடியில் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே கீழடியில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே வைக்க ஏதுவாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும் என வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அருங்காட்சியம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை தரப்பிலும் கீழடியில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த பின் அருங்காட்சியத்தில் பொருட்கள் வைக்கப்படும் என தொல்லியல் துறையும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து கீழடியில் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!