சவுதி அரேபியாவில் தனது மகனை பட்டத்து இளவரசராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் மன்னராக இருந்து வந்தவர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ். இவர் 2015ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் சகோதரர் சல்மான் மன்னர் ஆனார். இவர், இளவரசர் முகமது பின் நயேப்யை, பட்டத்து இளவரசராகவும், இளவரசர் முகமது பின் சல்மானை, பட்டத்து துணை இளவரசராகவும் நியமித்தார்.
இந்நிலையில் துணை இளவரசரான முகமது பின் சல்மானை (31), பட்டத்து இளவரசராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். மேலும் பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயேப், உள்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், ராணுவம், எண்ணெய் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பையும் கவனிப்பார்.
முகமது பின் சல்மானுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சவுதி அரேபியாவில் நிலவி வந்தது. கத்தாருடனான தூதரக உறவை சவுதி முறித்துக்கொண்ட சூழலில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த மாற்றம் காரணமாக, வாரிசுரிமை தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்