பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுசீல்குமார், லாலு பிரசாத் வீட்டுமனை விதிமீறல் செய்ததாக முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுசீல்குமார், மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு எழுதிய கடிதத்தில், அரசு சார்பில் கூட்டுறவு சங்கம் மூலம் எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் ஒரு மனை எம்எல்ஏ என்ற முறையில் லாலு பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதன் பக்கத்தில் எம்எல்சி ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை லாலு பிரசாத் வாங்கி கொண்டார். இந்த 2 மனைகளிலும் லாலு பிரசாத் விதிமுறைகளை மீறி இருக்கிறார். கூட்டுறவு சங்க சட்டப்படி ஒரு எம்எல்ஏவுக்கு ஒரு வீட்டுமனை தான் ஒதுக்கப்பட வேண்டும். தற்போது லாலு பிரசாத் பெயரில் 2 வீட்டுமனை இருப்பது தவறானது. மேலும் எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீடு கட்ட மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் உள்ளன. ஆனால் அந்த விதியையும் லாலு பிரசாத் மீறி விட்டார். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு இடத்தை வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதுபோல பல்வேறு வழிகளில் லாலு பிரசாத் விதிமுறைகளை மீறியுள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட 2 வீட்டு மனைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!