மேலூர் அருகே சிதிலமடைந்து கிடக்கும் சமத்துவபுரத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2001ம் ஆண்டு சமத்துவப்புரம் கட்டப்பட்டது, தமிழகத்தின் 100வது சமத்துவப்புரமான இங்கு பொதுமக்கள் குடியிருப்பு, சத்துணவுக்கூடம், கல்விக்கூடம், குடிமைப்பொருள் அங்காடி, பூங்கா என பல்வேறு சிறப்புகளுடன் திறக்கப்பட்டது,
இந்நிலையில், தற்போது இப்பகுதி போதிய பராமரிப்பு இல்லாமல் கருவேல மரங்கள் நிறைந்த வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. மேலும் இங்கு போதிய சாலை வசதிகள், கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் வருவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல், இங்குள்ள சிறுவர் பூங்காவில் எந்தவிதமான விளையாட்டு உபகரணங்கள் இன்றி, சிலைகள் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சமத்துவபுரத்தினை புனரமைத்து மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்