லக்னோவில் 12 வயது சிறுமி தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் துப்பாக்கி வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ தகுர்கஞ் பகுதியை சேர்ந்தவர் நரேந்திர சிங். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது துப்பாக்கியை மேஜையின் மேல் எடுத்து வைத்துவிட்டு துணி மாற்றுவதற்காக அறைக்குள் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த நரேந்திர சிங்கின் 12 வயது மகள் ஆயுஷி மேஜையில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டுருந்தார். அப்போது துப்பாக்கி திடீரென எதிர்பாராத விதமாக வெடித்தது.
இதில் சிறுமி படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரேந்திர சிங்கிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!