நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். டிசம்பரில் உறைபனி பொழிவு அதிகம் இருக்கும். இச்சமயத்தில் தேயிலை செடிகள், புல்வெளிகள், செடிகொடிகள் கருகும் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. அங்கு பொதுவாகவே இந்த மாதங்களில் நான்கு டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை செல்லும்.
உதகையில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே உறைபனியின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள், விளைநிலங்கள் மற்றும் புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்ததுபோலக் காட்சியளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்தக் கடும் குளிரால் எப்போதும் அதிகாலையில் கேரட் அறுவடைக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகள் உட்பட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் மலை காய்கறி பயிரான கேரட் அறுவடையில் ஏராளமான கூலிதொழிலாளர்கள் ஈடுபடுவர். இவர்கள் தற்போது 9 மணிக்கு மேல் மட்டுமே கேரட் அறுவடைக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக கடும் குளிர் நிலவுவதால் வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் பகல் நேரத்திலேயே நெருபூட்டி குளிர்காய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதகையில் பகல் நேரங்களில் அதிக பட்சமாக 18 டிகிரி செல்சியசும்,குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை காணப்படுகிறது.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்