Published : 01,Jan 2017 02:50 AM
ஒரே நாளில் 13 விவசாயிகள் உயிரிழப்பு... தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்ததால் துயரம்..!

தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிய துயரம் தாங்காமல் நேற்று ஒரு நாளில் 13 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 8 விவசாயிகள் உயிரிழந்தனர்.
கடம்பர வாழ்க்கையைச் சேர்ந்த பெண் விவசாயி சரோஜா, வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் விவசாயி கோகுலவாசன், மேற்குபகுதியைச் சேர்ந்த கணபதி, கடம்பங்குடி பகுதியைச் சேர்ந்த வீரமணி மற்றும் ஓர்குடியைச் சேர்ந்த கலியபெருமாள் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் திருப்புகலூரைச் சேர்ந்த கண்ணன், ராமர் மடத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி, போலகத்தைச் சேர்ந்த திருமால் வளவன் உள்ளிட்ட 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ஏகனவயலைச் சேர்ந்த ஞானசுந்தரம் உள்ளிட்ட இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே படர்ந்தபுளியைச் சேர்ந்த சுப்பையா, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணபதிஏந்தலைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து என ஒரே நாளில் 13 விவசாயிகள் உயிரிழந்தனர்.