தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதிபதி சத்தியநாராயணா அளித்த தீர்ப்பின் விவரம்:-
இந்நிலையில், தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. திமுகவை பொறுத்தவரை ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் எப்படி செயல்படுவது என ஆலோசனை செய்தோம்.
தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
“18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; காலம் தாழ்ந்து தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு குறித்து 18பேரும் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது” என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!