ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள தருண் அகர்வாலா குழுவின் அவகாசத்தை பசுமை தீர்ப்பாயம் நீட்டித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து. மேலும் தருண் அகர்வாலா தலைமையில் கொண்ட குழு ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதனைதொடர்ந்து தருண் அகர்வாலா, சதீஷ் சி.கர்கோட்டி, வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஆய்வு நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டு நாட்கள் நடந்த ஆய்வில் ஆலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு நடந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற குமரெட்டியாபுரம் கிராமத்தில் அவர்கள் ஆய்வு நடத்தியபோது கிராம மக்கள் அவர்களிடம் மனு அளித்தனர். ஆலையால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிபதி தருண் அகர்வாலா குழுவின் அவகாசம் வரும் 30 ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், அறிக்கை சமர்ப்பிக்க வல்லுனர் குழுவின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், குழுவின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 வாரங்களுக்கு அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக வல்லுநர் ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!