முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்ததையடுத்து கருணாஸ் எம்.எல்.ஏ கடந்த சில நாட்களுக்கு முன் கைது சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவரை வேறொரு வழக்கில் கைது செய்ய திருநெல்வேலி போலீசார் சென்னைக்கு வந்தனர். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்ந்தார். இதனால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மருத்துமனைக்கு ச் சென்று பார்த்தனர். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணாஸ், இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லினை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‘ இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. தமிழக சபாநாயகர் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என்றார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!