பாலுறவுக்கு துணையை தேர்வு செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தன் பாலின சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனக் கூறும் சட்டப்பிரிவு 377 அரசியல் சாசனப்படி செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் 377வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நிலையில் நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றுள்ள சந்திரசூட், பாலுறவுக்கான துணையை தேர்வு செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை என கருத்து தெரிவித்தார். இதற்கிடையில் ஒரு பாலினச் சேர்க்கையை குற்றமாக அறிவிக்கும் 377வது சட்டப்பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 377வது சட்டப்பிரிவு அரசியல் சாசன நெறிகள் படி செல்லுமா என்ற கேள்விக்கு விடை காண்பதோடு உச்ச நீதிமன்றம் நிறுத்திக்கொள்வதே சரி என்றும் இதை தாண்டி வேறு அம்சங்கள் குறித்து விசாரிக்க முடிவு செய்தால் மத்திய அரசோடு அவசியம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!