அதிமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீட் விவகாரத்தில் எந்த நீதியையும் அளிக்கக்கூடாது என்பதில் பாஜக அரசு உறுதியாக இருந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருப்பதாக சாடியுள்ளார். எனவே அதிமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கேரளா போவதற்கு சிறப்பு பேருந்து வசதி, ராஜாஸ்தான் மாநிலத்திற்கு போவதற்கான விமான பயணக் கட்டண வசதி மற்றும் அங்கு பெற்றோர்களுடன் தங்கி தேர்வு எழுதுவதற்கு வசதியாக தங்குமிடம் போன்றவற்றை மாணவர்களுக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடி கண்காணிப்பில் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்