தனுஷின் ‘மாரி2’வில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015 ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’. அந்தப் படத்தில் தனுஷ் ஏரியா தாதாவாக நடித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த ’செஞ்சிருவேன்’ டயலாக் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர். இதில் மலையாள புகழ் சாய் பல்லவி கதாநாயகியா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இப்போது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைய உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் ‘அற்புதமான குழுவுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய அனுபவமாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இதன் இயக்குநர் பாலாஜிமோகன் ‘மகிழ்ச்சியான உள்ளது ப்ரோ.. உங்களுடன் சேர்ந்து ஷூட்டிங் செய்வது’ என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளி டிடி உடன் இணைந்து பாடல் ஒன்றில் டொவினோ தாமஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல் யுடியூப்பில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!