ஓகி புயலால் காணாமல் போனவர்களை மீட்டு வர துரித நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 7 ஆம் தேதி கடலோர பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், தூத்தூர், சின்னத்துரை கிராமங்களில் இருந்து ஊர்வலமாக சென்று குழித்துறையில் ரயிலை மறித்து 12 மணி நேரம் போராட்டம் நடத்தினர். ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். மீனவப் பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தினால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை சுமார் 15 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஊர்வலமாக சென்ற கிராமங்களில் இருக்கும் 6 காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கையில் 240 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய 3,500 பேர் மீது மத்திய ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?