தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 8 மீனவர்கள் கேரளாவில் சடலமாக மீட்பு

தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 8 மீனவர்கள் கேரளாவில் சடலமாக மீட்பு
தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 8 மீனவர்கள் கேரளாவில் சடலமாக மீட்பு

கேரளாவில் இதுவரை சடலமாக மீட்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 

கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகப் பகுதியில் நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்க‌ளில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தூத்துகுடியைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் ஜூடு என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை திருவனந்தபுரம் பூந்துறை பகுதி மீனவர்கள் என அடையாளம் பெறப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 

சடலமாக மீட்கப்பட்ட மற்ற மீனவர்களை அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com