கேரளாவில் இதுவரை சடலமாக மீட்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகப் பகுதியில் நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தூத்துகுடியைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் ஜூடு என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை திருவனந்தபுரம் பூந்துறை பகுதி மீனவர்கள் என அடையாளம் பெறப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
சடலமாக மீட்கப்பட்ட மற்ற மீனவர்களை அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'