ஆர்கே நகர் இடைத்தேர்தலில் விஷால் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கச் செயலாளராகவும் உள்ள விஷால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் கடந்த இரு நாள்களாக ஆலோசனை நடத்தி வந்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் ஆர்.கே. நகர்த் தொகுதியில் பல முனைப் போட்டி உறுதியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையில் தொலைபேசியில் கருத்து தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஷால் ஆர்.கே இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என தெரிவித்தார். அத்துடன் தேர்தலுக்கு பின் விஷாலின் திரையுலக வாழ்க்கையும் அஸ்தமனமாகும் என்று அவர் கூறினார். இதுதொடர்பாக பேசிய இயக்குநர் அமீர், ஆர்.கே.நகர் விஷால் தேர்தலில் போட்டியிடுவது பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்