புதுச்சேரியில் கள ஆய்வுக்கு சென்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டை சோழ நல்லூரில் இன்று காலை கிரண்பேடி கள ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் திடீரென கிரண்பேடியை முற்றுகையிட முயன்றனர். அத்துடன் இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் அலட்சியம் காட்டுவதாகப் புகார் தெரிவித்து, கிரண்பேடியை திரும்பிப் போகச் சொல்லி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. கிரண்பேடியும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே அரசியல் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
Loading More post
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!