குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சோதனை நடைபெறுவது பாஜக அரசியல் லாபம் காண முயல்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் தவறில்லை. சோதனை நடத்தி பணமோ, சொத்தோ இருந்தால் கைப்பற்றட்டும். ஆனால் சோதனையை ஒரு குடும்பத்தினர் மீது மட்டுமே நடத்தாமல், பரவலாக நடத்த வேண்டும். அதிமுகவில் இடம் பெற்றிருந்த அனைவரது மீதும் சோதனை நடத்தப்பட்டிருந்தால், அது பொதுவானதாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் மீது மட்டுமே சோதனை நடத்துவதால், அரசியல் லாபத்திற்காக பாஜக அரசு செயல்படுகிறது என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுப்புகிறது” என்று கூறினார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!