வங்கிகளில் வழங்கப்படும் காசோலை சேவை முறை வருங்காலத்தில் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதாக அகில இந்திய வணிகர்கள் சங்க செயலாளர் பிரவீன் கண்டேல்வல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னணு பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக டிஜிட்டல் ரதத்தை தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’இந்தியாவிலுள்ள 80 கோடி ஏடிஎம் கார்டுகளில் 95 சதவிகிதம் ரொக்கப்பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதம் 5% மட்டுமே மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார். வங்கிகள், டெபிட் கார்டுக்கு ஒரு சதவிகிதமும் கிரெடிட் கார்டுக்கு 2 சதவிகிதமும் சேவை கட்டணமாக பெற்று வருகிறது. மத்திய அரசின் மானியம் மூலம் அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க, அரசு 25 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளதாகவும் மேலும் 6 ஆயிரம் கோடியை அதன் பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!