ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குரும்பூர் மற்றும் நாசரேத் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான ஆற்று மணல் தட்டுப்பாடு நிலவுவதால் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆற்று மணல்களை எடுத்து அரசு அனுமதியில்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் குரும்பூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு டிப்பர் லாரி மற்றும் 407 லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அரசு அனுமதியில்லாமல் ஆற்று மணல் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
இதேபோல் நாசரேத் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசு அனுமதியில்லாமல் ஆற்று மணல் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் பாரதிதாசனை கைது செய்தனர். இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற காவல்துறை சோதனையில் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!