இந்தியாவின் நம்பகமான பிராண்டாக கூகுள் திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த கோன் அண்ட் உல்ஃப் (Cohn & Wolfe) என்ற நிறுவனம் நம்பகமான பிராண்ட் பற்றி ஆய்வு நடத்தியது. பிரேசில், கனடா, பிரான்ஸ், சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 1400 பிராண்ட் பற்றி, 15 ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கூகுள் நம்பகமான பிராண்ட் என்று தெரியவந்துள்ளது. இணையத்தில் கூகுள் தேடு பொறியையே இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர்.
மைக்ரோசஃப்ட், அமேசான், மாருதி சுசுகி, ஆப்பிள் ஆகியவை கூகுளுக்கு அடுத்த நம்பகமான பிராண்டுகளாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நுகர்வோரில் 67 சதவிகிதம் பேர் பிராண்டின் நம்பகத்தன்மை அடிப்படையிலேயே பொருளை தேர்வு செய்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!