காஞ்சிபுரத்தில், வாடகைத் தாயாக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக பெண் காவலர் மீது, வயதான தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம், பங்காரம்மன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜெயக்குமார். இவரது மனைவி மல்லிகாவுக்கு வயது 58. இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், அண்ணன் மகனை எடுத்து வளர்த்து வந்தனர். 2004ஆம் ஆண்டு ஒரு விபத்தில் அவர் உயிரிழக்க, ஜெயக்குமார், மல்லிகா தனித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியை நாடிய தூரத்து உறவினரான வெள்ளை மதி என்ற பெண்காவலரின் குடும்பத்தினர், தங்கள் மகள் வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தருவார் என கூறியுள்ளனர். இதனை நம்பி ரூ.35 லட்சம் பணம் மற்றும் 42 சவரன் நகையை கொடுத்ததாகவும் ஆனால் அந்தப் பெண் காவலர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் ஜெயக்குமார் மல்லிகா தம்பதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?