ஒமைக்ரான் பாரவல் அதிகரித்து வருவதையடுத்து, அமெரிக்காவில் கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளிலேயே, உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுவதுபோல், இசைத்துறையில் கிராமி விருதுகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு பிரிவுகளில் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா ஒமைக்ரான் காரணமாக, நேரலை பார்வையாளர்கள் மற்றும் இணையத்தில் இணைந்த பார்வையாளர்களுடன், ஜனவரி 31-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருந்தது. ஆனால், அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 6 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி ரெக்கார்டிங் அகாடமி மற்றும் அதன் தொலைக்காட்சி கூட்டாளியான சி.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 31-ம் தேதி நிகழ்ச்சியை நடத்துவது, மிகவும் அபாயகரமானது என்பதால் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் மாகாணத்தின் சுகாதாரம், பாதுகாப்பு, எங்களின் கலைஞர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். இசைக் கலைஞர்கள், நேரலை பார்வையாளர்கள் மற்றும் எங்களுடன் அயராது உழைக்கும் நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் கொரோனா பாதிப்பு காரணமாக, கிராமி விருதுகள் விழா, ஜனவரி 31-ம் தேதி நடத்த திட்டமிட்டு பின்னர், மார்ச் 14 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டும் கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளநிலையில், எப்போது மீண்டும் நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவில்லை.
இதையும் படிக்கலாமே : தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பு துவங்கியது : படக்குழு வெளியிட்ட அப்டேட்
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!