20 நாட்களுக்குப் பிறகு ஊருக்குள் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன். பள்ளியின் சுற்று சுவரை இடித்துத் தள்ளியது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து பிடித்து வரப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள தொரப்பள்ளி, புத்தூர்வயல், மண்வயல், போஸ்பெரா உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு வீடுகளை இடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது.
விநாயகன் யானைக்கு மதம் பிடித்திருந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அடர் வனப்பகுதிக்குள் சென்று இருந்தது. இதையடுத்து கடந்த 20 நாட்களாக யானை வனத்தை விட்டு வெளியே வராத நிலையில், வனத்துறையினரும் மக்களும் சற்று நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன் அம்பலமூலா பகுதிக்குள் நுழைந்து அங்கு உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டடத்தை இடித்து சேதப்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து பள்ளியின் நுழைவு வாயிலையும் உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானை விநாயகன் வயலுக்குள் இறங்கி நெற்பயிர்களை தின்றதோடு மிதித்தும் சேதப்படுத்தியது. 20 நாட்களுக்கு பிறகு காட்டு யானை விநாயகன் மீண்டும் ஊருக்குள் வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்