அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டவரை, கோயில் காவலாளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிரட்டுவதாக திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்குமார், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் திருச்சி - சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான முக்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சரிடம் நேரடியாக பணி ஆணை பெற்ற மகேஸ்குமார், சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
கோயிலின் காவலாளி வரதன், தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி அர்ச்சகர் பணியிலிருந்து விலகிடுமாறு மிரட்டுவதாக சமயபுரம் கோயில் இணை ஆணையரிடமும் காவல்துறையிலும் புகார் அளித்ததாக மகேஸ்குமார் கூறினார்.
இந்நிலையில் நேற்றிரவு காவலாளி வரதன் மதுபோதையில் தனது வீட்டுக்குள் நுழைந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததாக சமயபுரம் காவல் நிலையத்தில் மகேஸ்குமார் புகார் அளித்துள்ளார். தனக்கும் தனது மனைவிக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி கோயில் இணை ஆணையரிடம் கேட்டபோது, கோயில் காவலாளி வரதனிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்