கடந்த மார்ச் மாதத்தில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, 6.70 சதவீத அளவுக்கு வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது வீட்டுக் கடன்களுக்கு 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு, 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டின் முக்கியமான வங்கியான எஸ்பிஐ உயர்த்தி இருப்பதால், மற்ற வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி 6.80 சதவீதமாக இருந்தது. இதனை 0.10 சதவீதம் குறைத்து மார்ச் மாதத்துக்கு மட்டும் 6.70 சதவீதமாக வீட்டுக் கடன் வட்டியை நிர்ணயம் செய்திருந்தது எஸ்பிஐ. அதேபோல மார்ச் மாதம் பரிசீலனை கட்டணத்தையும் எஸ்பிஐ நீக்கி இருந்தது.
தற்போது பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை இந்த (+ ஜிஎஸ்டி) இந்தக் கட்டணம் இருக்கக் கூடும். வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டாலும் 7 சதவீதத்துக்குள் இருப்பதால் இதுபோன்ற சிறிய ஏற்றம், வீடு வாங்குபவர்களை பாதிக்காது என்றே நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். வங்கித் துறையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் வீட்டுக் கடன் வட்டியும் ஒன்று.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி