பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சூழலியலாளரான கிரேட்டா தன்பெர்க்கின் முழு உருவசிலை நிறுவப்பட்டுள்ளது.
23,760 யூரோ செலவில் இந்த சிலையை நிறுவியதில் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பும் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி நிர்வாகம் மாணவர்களுக்கு அனுப்பிய இமெயிலில் கிரேட்டாவை ஒரு சர்ச்சைக்குரிய நபராக பார்த்தாலும், அவருடைய விவாதம் மற்றும் விமர்சன உரையாடல்கள் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிரேட்டா பற்றி பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கூறியபோது, ‘’உலக அளவிலான பிரச்னைகளைப் பற்றி குரல் எழுப்பும், பெருமைக்குரிய இவர் அனைவருக்கும் ஓர் சிறந்த ரோல் மாடல். கொரோனா காரணமாக மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வருவதில்லை. இருப்பினும் சிலைபற்றி கூறியபோது, 23,760 யூரோ மாணவர்கள் மூலமாகக் கிடைத்தது.
கிரேட்டாவைபோல் மற்ற மாணவர்களும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளைப் பற்றிபேச முன்வரவேண்டும்’’ என்று கூறினார். பல்கலைக்கழகத்தின் இந்த செயல்குறித்து பலரும் தங்கள் பாராட்டுக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்