தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் கட்சித் தலைமை விருப்ப மனு பெற்று வருகிறது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, முதல்முறையாக தேர்தலில் களம் காண்பதற்காக நேற்று விருப்ப மனு வழங்கினார். தொகுதியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர், விருப்ப மனுவை அளித்தார். இதைத் தொடர்ந்து, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் விருப்ப மனு அளித்துள்ளார். அவரும் தொகுதியின் பெயரைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடாமல், விருப்ப மனுவை அளித்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தலைமை எந்தத் தொகுதியில் நிற்கச் சொன்னாலும் போட்டியிட உள்ளதாகவும், கட்சித் தொண்டர்கள் தம்மை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை