போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
ஏற்கெனவே தொழிலாளர் நல ஆணையம் முன்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. எனவே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தொழிற்சங்கத்தினரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, இன்று தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் இடையே பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்ற நிலையில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ரூ.1000 தற்காலிக நிவாரணமாக அளிக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், 3 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் அரசாங்கம் தொழிலாளர்மீது எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என்று உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், வேலைநிறுத்தம் நடைபெற்ற நாட்களுக்கு சம்பள பிடித்தம் இருக்காது என்றும் அரசாங்கம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!