சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது.
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து நேற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. இதில் தொடக்க வீரர் டோம் சிப்லே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் நேற்றைய தினமே சதமடித்துவிட்டார். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் விரைவாக 82 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூட் 200 ரன்களை கடந்தார். 100-ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 218 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு வந்த போப், ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 34, 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க திணறினாலும் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 600 ரன்களுக்கு டிக்ளெர் செய்யுமா அல்லது ஆல் அவுட் ஆகுமா என்பதுதான் நாளைக்கான எதிர்பார்ப்பு.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை