நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஒலியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக எதிர்க்கோஷ்டியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் காஜி ஷ்ரேஷ்தா தெரிவித்தார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் ஒலி ஒரு குழுவாகவும் முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தஹல் மற்றும் மாதவ் குமார் நேபாள் ஆகியோர் ஒரு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பிரதமர் ஒலி நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்க்கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஒலி நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்காக ஒலி மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி