ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி சொன்னது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தும் என காரைக்குடி எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ப. சிதம்பரம் பேசியதாவது “ ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி சொன்னது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தும்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிறு, சிறு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அது அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இடையே உள்ளது தான். ஆனால், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு ,மத சார்பின்மை போன்ற பெரிய கொள்கை விஷயங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.
அமெரிக்கத் தேர்தலுக்காக மோடி சென்று ஒருவருக்காக பிரச்சாரம் செய்ததும், இன்னொரு நாட்டு அரசியலில் தலையிடுவதும் ராஜாங்க உறவிற்கு ஏற்புடையது அல்ல. இதனை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!