சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடலூர் - பண்ரூட்டியில் செல்வமுருகன் என்பவர் நெய்வேலி நகரக் காவல்நிலையப் போலீஸாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருக்கிறார். சாத்தான் குளம் இரட்டைக் கொலைக்குப் பிறகு, உயர்நீதிமன்றமே எச்சரித்தும் போலீஸ் டார்ச்சரும், அதனால் கஸ்டடி மரணங்களும் தொடருகிறது" என்றார்.
சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை - செல்வமுருகன் என்பவர் பலி!@CMOTamilNadu-ன் பொறுப்பில் இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல் இன்றி தடுமாறுகிறது.
இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். pic.twitter.com/2Y0OvDf3Fh— M.K.Stalin (@mkstalin) November 7, 2020Advertisement
மேலும் "அதிமுக ஆட்சியில் காவல்துறை சரியான வழிக்காட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது. செல்வமுருகனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது உண்மையான வழக்கிற்காகவா , பொய்ப் புகாரிலா, ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார் தாக்கிய போலீஸ் யார் யார் ? காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி ? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் ? " என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
மேலும் "இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் மறைத்து, தமிழக காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் முதலமைச்சர் சீர்குலைத்து விட வேண்டாம்" என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி