ராஜஸ்தான் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார் இங்கிலாந்து நாட்டின் அதிரடி பேட்ஸ்மேன் பட்லர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். இந்நிலையில் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த பொசிஷனிலும் இறங்கி சந்தோஷமாக பேட் செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்த பட்லர், கடந்த சில ஆட்டங்களாக மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார்.
“இன்னிங்க்ஸை ஓப்பன் செய்வதிலிருந்து மிடில் ஆர்டரில் ஆடுகின்ற அனுபவம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. மிடில் ஆர்டரில் விளையாடும் போது களத்தில் அதற்கு முன்னதாக நடந்ததற்கு ஏற்ப நாம் ஆட்டத்தில் ரியாக்ட் செய்ய வேண்டியுள்ளது.
இந்த இரண்டு பொசிஷனிலும் விளையாடுவதில் எனக்கு திருப்தி தான். அணிக்கு எனது ஆட்டம் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு இறங்கி அந்த டாஸ்க்கை சந்தோஷமாக செய்கிறேன்.
சி.எஸ்.கேவுடனான ஆட்டத்தில் வலுவான பார்ட்னர்ஷிப் அமையாதது தான் சற்று பின்னடைவு ஏற்பட காரணம். இருப்பினும் முதலில் அமைதியாக அடக்கி வாசித்து ஆட்டத்தை எங்கள் பக்கமாக திருப்பினோம். அதே போல எங்கள் அணி ஃபீல்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த சூழலில் பட்லரை சென்னை அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என சென்னை ரசிகர்கள் சிலர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். தோனியின் டி-சர்ட்டை பட்லர் வாங்கிக் கொண்ட நிலையில் சென்னை அணி ரசிகர்களின் மனதை அவர் வென்றிருக்கிறார்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!