நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து அது நீக்கப்பட்டு புதிய புள்ளி விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. அதில், திரிபுராவில் நீட் தேர்வு எழுதியதே 3,536 பேர் என்கிற நிலையில் தகுதி பெற்றவர்கள் 88,889 பேர் என முடிவுகள் வந்திருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதேபோல் தெலங்கானாவில் 50,392 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 1,738 பேர் மட்டுமே தேர்ச்சி என இருந்தது. ஆனால் அங்கு தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம் 49.15 சதவீதம் என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உத்தரபிரதேசத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதியதில், 7,323 பேர் மட்டுமே தேர்ச்சி என்றும் தேர்ச்சி விகிதம் 60.79% என்றும் தவறான முடிவுகள் வெளிவந்திருந்தன. உத்தரகாண்ட்டில் 12,047 மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சி பெற்றதாக புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த தேசிய தேர்வு முகமை, அச்சடிக்கப்பட்டதில் தவறு நடந்துவிட்டதாகவும், திருத்தப்பட்ட அறிக்கை பதிவேற்றப்படும் என்றும் தெரிவித்து இணையத்தில் இருந்து நீக்கியது
இந்நிலையில் புதிய புள்ளிவிவர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது திரிபுராவில் தேர்வு எழுதிய 3536 பேரில் 1738 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை