கொரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் ஜூன் மாதம் நடக்க இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்( Indian Council of Agricultural Research) தேர்வுகளின் தேதிகளை கருத்தில்கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் நெட் தேர்வினை மீண்டும் ஒத்திவைத்திருந்தது.
செப்டம்பர் 16 -25க்குள் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என உறுதி செய்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் 16,17,22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதால், நெட் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என என்.டி.ஏ வின் மூத்த இயக்குநர் சாதனா பரஷார் தெரிவித்துள்ளார்.
இரண்டு தேர்வுகளுக்கும் முன்பதிவு செய்திருக்கும் மாணவர்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு நெட் தேர்வின் தேதிகள் மாற்றிவைக்கப்பட்டுள்ளது. பாடவாரியான, நேரவாரியான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சாதனா கூறியுள்ளார்.
Loading More post
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?