இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் விருப்பம். ஆனால் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியம். இப்போது பெரும்பாலான பெண்கள் முப்பது வயதில்தான் முதல் குழந்தைக்கே தயாராகிறார்கள். எனவே இரண்டாம் குழந்தைக்கு இடைவெளி எடுப்பது சிரமமான ஒன்றாக உள்ளது.
முதல் குழந்தைப்பேறுக்குப் பின் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மீண்டும் கருத்தரிப்பதற்கு முன், முதல் பிரசவத்திலிருந்து முழுவதும் குணமடைவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தைப் பிறந்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிக்கும்போது குழந்தைக்கு அதிக ஆபத்தும், எடை குறையவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக 18-23 மாதங்கள் இடைவெளி அவசியம். அப்போதுதான் உடல் முழுவதுமாக குணமடைந்து அடுத்த கருத்தரிப்புக்கு தயாராகும்.
ஆறு மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, 7-17 மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், பாதிப்புகள் ஏற்படுவது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரிக்கும்போது, பிணைப்பு குறைகிறது. தன்னுடைய இடத்தை இரண்டாவது குழந்தை எடுத்துக்கொண்டதாக நினைத்து தன்னைத் தானே முதல் குழந்தை பிரித்துக்கொள்ளும் எனச் சொல்லப்படுகிறது.
அடுத்த கருத்தரிப்புக்கு 7 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை இடைவெளி எடுத்துக்கொள்ளவேண்டும். இது தாயும் குழந்தையும் ஓரளவு ஆரோக்கியமாக இருக்க உதவும். இரண்டு குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றுக்கொள்வதன்மூலம் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’